டெபி சூறாவளியால் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து கடும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், சூறாவளியின் எதிரொலியால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், சுமார் 40 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பித்த டெபி சூறாவளி, நான்காம் கட்ட சூறாவளி நிலையை எட்டியது. இந்த அதிதீவிர சூறாவளியால் குவீன்ஸ்லாந்து முழுமையாக முடக்கப்பட்டது. சுற்றுலா விடுதிகள் சரிந்து விழ, தொடர்பு சாதனங்கள், மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையையடுத்து பெரும்பாலான குவீன்ஸ்லாந்து மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியமையால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை சூறாவளியின் வேகம் சற்றுக் குறைந்தபோதும், இரவு மீண்டும் வேகம் கூடியது. சூறாவளியால் கொட்ட ஆரம்பித்த கடும் மழை இன்னும் தொடர்கிறது.
இதையடுத்து, குவீன்ஸ்லாந்தின் மேட்டு நிலப் பகுதிகள் உட்படப் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
குவீன்ஸ்லாந்தின் அண்டை மாகாணமான நியூசௌத் வேல்ஸ் பகுதியின் லிஸ்மோர் நகரிலும் டெபியின் தாக்கம் பரவியுள்ளது. அங்குள்ள தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரத் தொடங்கியுள்ளனர். கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டதே இதற்குக் காரணம்.
டெபி சூறாவளிக்கு ஒரு பெண் சுற்றுலாவாசி பலியாகியுள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM