ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் அறுவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கல்கிசை நீதவான் இன்று (30) பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர்கள் தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை முதலாம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதுடன், அதற்கு பிறகு மற்றுமொரு இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டு, மொத்தமாக ஆறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM