இலங்கையில் முதல் முறையாக வெளிநாட்டு அணிகள் பங்கேற்கும் சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
'டீ கப்' என்ற பெயரில் எல்.எஸ்.ஆர். நிறுவனம் நடத்தும் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதி களில் நடைபெறவுள்ளது.
சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய நடைபெறும் இந்த சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதல்முறையாக 10 நாடுகளைச் சேர்ந்த 7 வெளிநாட்டு அணிகள் பங்குபற்றவுள்ளன.
7ஆம் திகதி மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஆரம்பமாகும் குறித்த போட்டியானது 133 கிலோமீற்றர்கள் பயணமாகி மஹியங்கனையில் நிறைவுபெறும்.
போட்டியின் இரண்டாம் நாளான 8ஆம் திகதி மஹியங்கனையில் ஆரம்பித்து கண்டியில் நிறைவுபெறுகின்றது. இதன் பந்தயத் தூரம் 71 கிலோமீற்றராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் கடைசி நாளான 9ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டியில் ஆரம்பித்து நீர் கொழும்பு வரை பயணமாகின்றது. இதன் பந்தயத் தூரம் 120 கிலோமீற்றராகும்.
நெதர்லாந்து, கென்யா, ஜேர்மன், பிலிப்பைன்ஸ், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பல அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. அதேபோல் இலங்கையின் பத்து அணிகளும் இதில் கலந்துகொள்கின்றன.
இப்போட்டிகளுக் கான அனுசரணையை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM