முல்லைத்தீவு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் ஒன்றிணைந்த பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை உடன் வழங்கவேண்டும் எனவும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்து போராடிவருவதாகவும் இதுவரையில் இதற்கு நல்லதொரு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இதனால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றையதினம் குறித்தத கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நல்லாட்சி அரசு விரைவில் தமது கோரிக்கையினை ஏற்று நல்லதொரு முடிவினை தரவேண்டும் என்றும், நாட்டில் பட்டம் பெறாதவர்கள் எல்லாம் அரச துறைகளில் அரசியல் வாதிகளின் அனுசரனையோடு வேலை புரிகின்ற போது தாங்கள் மட்டும் வேலையில்லாது வீதியில் அலைவதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்காக முல்லை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM