மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் 63 தொழிற்சங்கங்கள் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 63 தொழிற்சங்கங்களும் கைகோர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.
மேற்படி சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இம்மாத இறுதிக்குள் சைட்டம் கல்லூரி பிரச்சினைக்கு அரச கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அரசாங்கம் முடிவு எதையும் எடுக்காவிடின், எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் நளிந்த ஹேரத் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM