வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா!

Published By: Robert

28 Mar, 2017 | 03:59 PM
image

வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா நாளை மாலை 3 மணியளவில் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு சமாதி அமைந்துள்ள பிரதேசமான ஒட்டுசுட்டான் கற்சிலைமடு சிலையடி பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் நிதியொதுக்கீட்டில் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தால் குறித்த திருவுருவசிலையானது அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராசா பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும்  வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

இந்தவிழாவில்  பாரம்பரிய கலை பண்பாட்டு வீதிப்பேரணி, பண்டாரவன்னியனின் வீரக்கொடியேற்றல் மற்றும் திருவுருவச்சிலை திறந்து வைத்தல், கல்வெட்டு திரைநீக்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் பற்றிய வரலாற்று நூல்களை எழுதிய மறைந்த கலைஞர் அமரர் முல்லைமணி அவர்களுக்கான நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.

குறித்த சிலை அமைக்கப்படும் பிரதேசத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் சமாதி  ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டு அதில் பண்டாரவன்னியனின் இறப்பு பற்றிய பதிவும் இடப்பட்டிருந்தது. இறுதி யுத்தம் இடம்பெற்ற 2009க்கு பின்னர் குறித்த சமாதி உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51