தேர்தல்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுமாயின் நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களும் முடங் கும் வகையிலான இரண்டாவது பாரிய ஹர்த்தாலினை இவ்வருடத்துக்குள் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என தூய்மையான ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் தமது அமைச்சரவை கூட்டத்தை கடலுக்கடியிலேயே நடத்த வேண்டியேற்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும் அவ் அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் மக்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவிடாமல் நடைபெற வேண்டிய தேர்தல்களை ஒத்திவைத்து வருகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலங்கள் ஏற்கனவே நிறைவு பெற்றிருக்கும் நிலையில் குறித்த தேர்தலினை நடத்துவதற்கான எவ்வித ஆயத்தங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளாமல் அதில் காலதாமதத்ததையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
அத்துடன் தொடர்ந்தும் தேர்தல்கள் நடத்தப்படுவதில் ஏற்பட்டு வரும் காலதாமதத்தினால் மக்களது ஜனநாயக உரிமைக்கு பங்கம் ஏற்படுவதுடன் நாட்டினது அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பாரிய மந்தகதியினையும் உருவாக்கியுள்ளது.
இதேவேளை தேர்தல்களை நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து நாட்டின் ஜனநாயகத்துக்கு தீங்கு ஏற்படும் வகையில் செயற்பட்டுவருவதற்கு எதிராக நாடு தழுவிய ரீதியிலான மாபெரும் ஹர்த்தால் ஒன்றிற்கு அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள ஹர்த்தாலானது எமது நாட்டில் முன்
னெடுக்கப்படவுள்ள இரண்டாவது பாரிய ஹர்த்தாலாகும்.
கடந்த 1953 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு எதிராக பண்டாரநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய ரீதியிலான பாரிய ஹர்த்தாலினால் அரசாங்கம் பாரிய பொருளாதார விளைவுகளை சந்திக்க வேண்டியேற்பட்டது. இதனால் அப்போது ஆட்சியிலிருந்த சேர் கொத்தலாவல தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கப்பலில் தமது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பிற்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
அதே போன்றதொரு நிலையை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் இவ்வருடம் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். தேர்தல்களை புறக்கணித்து வருவதால் அரசாங்கத்துக்கு இந்நிலை ஏற்படவுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள் ளப்படவுள்ள இவ்விரண்டாவது ஹர்த்தா லினால் சகல அரச நிறுவனங்களும் முடங்கும். அனைத்து நிறுவனங்களினதும் பாரிய நிர்வாக முடக்கத்தினால் நல்லாட்சி அரசாங்கம் பாரிய நெருக்கடியை சந்திக்கும். இதனால் அரசாங்கத்தினது அமைச்சரவைக் கூட்டத்தினை கடலுக்கடியிலேயே மேற் கொள்ள வேண்டியேற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM