நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறிகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீண்டகாலத்திற்கு பின்னர் நேற்று கதிர்காமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பலப் பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் எட்டு பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சட்டவிரோத துப்பாக்கியை வைத்துக்கொண்டு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், குறித்த நபருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கதிர்காமத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபாலி காரியவசமிற்கு கிடைக்கப்பெற்ற அவசரத் தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிஸார், வீடொன்றில் மறைந்திருந்த நபரை கைது செய்துள்ளனர்.
'ரத்கம உதேஷ்” என்றழைக்கப்படும் குறித்த நபர், போலி கடவுசீட்டை பயன்படுத்தி இந்தியா, சவூதி, நேபாளம் மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM