இன்று முதல் கண்டி எயார்பார்க் தோட்டம் உள்ளிட்ட ஆறு தோட்டங்களில் திட்டமிட்டப்படி வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுமென இலங்கை செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் மேனகா தெரிவித்தார்.
நாம் அரச பெருந்தோட்டயாக்கத்துக்கு கொடுத்த மூன்று வார காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இதுவரையிலும் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாததால் ஆர்ப்பாட்டத்துக்கு செல்லவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதார துறையின் சக்தியாக விளங்கும் பெருந்தோட்டத்துறை தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்து அரச பெருந்தோட்டக்காணிகளை தனியாருக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
அத்துடன் தற்போது குறைவான வேலை நாட்களே குறித்த தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நிலையில் இவ்வாறு தோட்டக்காணிகளை தனியார் மயப்படுத்துவதின் ஊடாக அவர்கள் நிரந்தரமாக தொழில்வாய்ப்புக்களை இழக்க வேண்டிய நிலையேற்படும். ஆகவே நஷ்டத்தில் பெருந்தோட்டத்துறை இயங்குவதாக இருந்தால் குறித்த காணிகளில் பரம்பரையாக தொழில் செய்த தோட்டத்தொழிலாளர்களுக்கே வழங்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்குள் குறைக்கப்படும்.
இவ்வாறான தங்களது அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் தோட்டத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே கண்டி உன்னஸ்கிரிய எயாபார்க் தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.
இவ்விடயத்தில் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு அரச பெருந்தோட்டயாக்கம் எம் முடன் பேச்சுவார்த்தையொன்றினை ஏற்பாடு செய்வதாக அறிவித்திருந்ததுடன் நிலவும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து ஒருவாரகாலத்துக்குள் அறிவிக்குமாறும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில் தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட மூன்று வார கால அவகாசம் கடந்த 24 ஆம் திகதி நிறைவுற்றிருக்கும் நிலையிலும் குறித்த தொழிலாளர் பிரச்சினைக்கு எவ்வித தீர்வினையும் இதுவரையில் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை. எம்முடனான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் அரச பெருந்தோட்டயாக்கம் முன்வரவி ல்லை. ஆகவே இன்று திங்கட்கிழமை முதல் கண்டி எயாபார்க், நவனா கல, கந்தவத்தை, கொமனிகல, வெலி கொல, உள்ளிட்ட ஆறு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர் கள் தொடர்ச்சியான போராட்டங்களை தோட்டத்தொழிலா ளர்கள் முன்னெ டுக்கவுள்ளனர். இவ்விடயத்தில் தோட்த்தொழி லாளர்களுக்கு சரி யான தீர்வொன்றை பெற்றுத்தரும் வரையில் குறித்த போராட்டம் தொட ரும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM