காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகக் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 20வது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த 8ஆம் திகதி தொடக்கம் குறித்த போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னி மாவட்ட பாராளுமணர் உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் சந்தித்து ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
அத்தோடு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஸ்டாலின் தலைமையில் வருகைதந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தென்பகுதியை சேர்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் மக்களை சந்தித்து ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் கதைகளையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM