பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, நேபாளத்தில் 14 வைத்திய நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், அந்நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்ததோடு, தற்போது இயல்பு நிலை நோக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் நேபாளத்தில், சுகாதார மையங்கள் அமைத்து கொடுப்பதற்கு யுனிசெப் அமைப்புடன், அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில், ஆர்ஜென்டினா மற்றும் பிரபல பார்சிலோனா அணியின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி, தனது நலத்திட்ட அமைப்பினுடாக 14 சுகாதார மையங்ககளை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளார்.
மேலும் 74 வைத்திய நிலையங்கள் அமைக்கும் யுனிசெப் நிறுவனத்தின் திட்டத்தில், மெஸ்ஸி தற்போது 3 வைத்திய நிலையங்களை கட்டியுள்ளதோடு, மேலும் 11 நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மதத்திற்கு முன்பாக நிறைவுசெய்யப்படவுள்ளதாக மெஸ்ஸி பவுண்டேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு மெஸ்ஸி பவுண்டேஷன் சார்பில், நேபாளத்தில் கட்டி முடிக்கப்பட்ட வைத்திய நிலையங்கள், தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக யுனிசெப் அமைப்பிற்கான நலத்திட்ட தூதுவர் தெரிவித்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM