மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் குடா மஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நேற்று இரவு 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த 3 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடா மஸ்கெலியா பகுதியிலிருந்து மஸ்கெலியா நகர பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 15 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களே காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதி 15 வயதுடைய சிறுவர் என்பதால் அவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் தடுப்புக் கட்டை செயலிழந்ததன் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM