சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கற்பிக்க தனியான கல்வி பிரிவுகள் :  சந்திரிகா குமாரதுங்க 

Published By: Ponmalar

24 Mar, 2017 | 07:32 PM
image

(க.கமலநாதன்)

மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தில்ப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நல்லிணக்க செயளணி மற்றும் கல்வி அமைச்சின்  புதிய திட்டத்தின் கீழ் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனூடாக இன்றைய சமதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சவாலான சூழ்நிலைகளை ஒற்றுமையுடன் இருந்து சமாளிக்கின்ற ஒரு எதிர்கால சந்தியினை உருவாக்குவதே பிரதான நோக்கமாக உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சகோதரத்துவ பாடசாலை அமைப்பு பணிகள், சமய ரீதியிலான நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள், உள்ளிட்டவை வழங்கப்ட்டதன் பின்னர் பாடசாலைகளின் உள்ளேயும் இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

அதேபோல தற்போதும் கல்வி சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை களைய இன்னும் பல தலைமுறைகளை நாம் கடக்க வேண்டியிருக்கும் அதற்கு அடித்தளம் இடும் வகையிலான கல்வி மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தே தற்போது நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள் பாடசாலைகளுக்கும் மற்றைய பாடசாலைகளுக்குமான வள பகிர்வு செயற்பாடுகள் சமாந்தர தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இவை கடந்த காலங்களில் இடம்பெறவில்லை. அரசியலை விடுத்து பார்கின்ற போதும் கடந்த காலங்களுடன் ஒப்பீட்டளவில் பார்கின்ற போது தற்போது கல்வி வளர்சி குன்றியுள்ளது அதனை மறுசீரமைக்க நாம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34