நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடருமானால் புதிய அரசியல் கட்சியொன்று உருவாகும் நிலைமையை தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை அழித்திருக்காவிட்டால் இன்று என்னை கைதுசெய்ய வேண்டுமென்று கூச்சலிடுவோர் வாய் திறக்க முடியாமல் இருந்திருப்பார்கள். என்னுடன் நெருங்கி இருந்தவர்களே என்னை வெளியேற்ற துடிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்டிக்கு வியாழக்கிழமை விஜயத்தை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் முன்னாள் ஜனாதிபதி உரையாற்றுகையில்
நான் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். ஆனால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு என்னோடு நெருங்கி இருந்தவர்களே முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.
ராஜித சேனாரத்ன என் மீது குற்றங்களை சுமத்துகிறார். என்னை சிறைக்கு அனுப்ப முடியும் என வாதிடுகின்றார். நான் யுத்தத்தை முடித்து வைத்ததினால் இவ்வாறு அவர் பேசுகின்றார்.
பிரபாகரன் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் முப்பது வருடகால யுத்தம் முடிக்கப்பட்டிருக்காவிட்டால் நாட்டுக்கு சுதந்திரத்தை மீளப் பெற்றுக் கொடுத்திருக்காவிட்டால் இன்று கூச்சலிடுவோர் “வாய்” திறந்திருக்க மாட்டார்கள்.
என்னால் தான் இவர்கள் இன்று வாய் திறக்க முடிந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறியவர்களே எம்மை வெளியேற்ற முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க, ஸ்ரீமாவோ பண்டார நாயக்க ஆகியோருடன் அன்று கட்சியில் நான் இருந்தேன் கட்சியை பாதுகாத்தேன்.
பண்டார நாயக்க கொள்கைகளைப் பாதுகாத்தேன். ஆனால் இன்று எம்மை எதிரிகளைப் போன்று பார்க்கின்றனர். இன்று கட்சியில் எம்மோடு இணையுங்கள் என்ற அழைப்பில்லை. மாறாக கட்சியை விட்டு வெளியேற்றுங்கள் என்ற செய்தியே வழங்கப்படுகிறது.
நாட்டில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடருமானால் எதிர்காலத்தில் புதியதொரு அரசியல் கட்சி உருவாவதை தடுக்க முடியாது போகும்.
நான் என்ன உணவருந்தினேன், எனது சமையலறை, மலசல கூடம், 2005 தொடக்கம் 2015 வரை நான் எப்படி நித்திரை செய்தேன் என்பவை தொடர்பிலேயே இந்த அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.
இன்றைய நல்லாட்சி தொடர்பில் மக்களிடம் கேட்டால் உண்மையை புரிந்து கொள்ள முடியும். இன்று பச்சை மிளகாயின் விலை வானை எட்டியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM