வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புதுக்குளம் பகுதியில் நேற்றிரவு (23) தனியாகச் சென்ற பெண்ணை வழிமறித்த இருவர் அவரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியில் வசித்துவரும் குறித்த பெண் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
அவர் தனது வியாபாரப் பணத்தை சேகரித்து கொண்டு இரவு 8.30 மணியளவில் வீடுநோக்கி செல்கையிலேயே இருவர் அவரை வழிமறித்து முகத்திற்கு “டோர்ச் லைட்” வெளிச்சத்தை பாய்ச்சிய பின், பெண்ணை தாக்கிவிட்டு பணப்பையை அபகரித்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
பறிகொடுத்த பணப்பையில் 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் காசோலைகள் வங்கி கடன் அட்டைகள் இருந்ததாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் தமிழில் முறைப்பாடு வழங்கும் இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு மேற்கொண்டதாக தெரிவித்த குறித்த பெண், விபரங்களை கேட்டறிந்த பொலிஸார் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கும் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM