பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் தமது வாழ்த்துக்களை பிரதமருக்குத் தெரிவித்து வருகின்றனர்.
தனது நீண்ட கால அரசியல் பயணத்தில் 1993, 2001 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள். அதிலும், 2015ஆம் ஆண்டில் இரண்டு முறை பிரதமர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆரம்பப் புள்ளியை இட்டவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் எதிரும் புதிருமான இரண்டு கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்துக்கு வித்திட்டார் அவர்.
தற்போது, நாட்டில் வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினத்தையொட்டி, சர்வ சமயப் பிரார்த்தனைகளும் நாடெங்கிலும் அவரது கட்சித் தொண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM