கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு விழாவில் கனகபுரம் விளையாட்டுக்கழகம் முதலாவது இடத்தினை பெற்று சம்பியனானது.
வருடந்தோறும் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெறுகின்ற விளையாட்டு விழா இம் முறை கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
குறிப்பாக ஜெயந்திநகர் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்ல மாணவர்களும் மகாதேவா விளையாட்டுக்கழகம் மூலம் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொண்டு பல போட்டிகளில் வெற்றிபெற்றனர்.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டம் விளையாட்டுத்துறையில் மேலும் வளரவேண்டும்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது. ஆனால் இவ்வருட போட்டியில் அதை தாண்டி வரவேண்டும் எனத் தெரிவித்த அவர் கிளிநொச்சியிலிருந்து தேசிய சாதனைகளை நிலைநாட்டவும் சர்வதேச போட்டிகளில் பங்கும் கொள்ளும் அளவிலும் போட்டியாளர்கள் வளர்ந்துள்ளனர்.
ஆனாலும் விளை யாட்டில் மேலும் வளர வேண்டும். நாம் அதற்காக எம்மால் முடிந்த உதவிகளைசெய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM