அங்குராங்கெத்த ஹேவாஹெட்டை தோட்டத்தில் இன்று வௌ்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய மண்சரிவு, தாழிறக்கம் மற்றும் பாறைகள் புரண்டதன் காரணமாக 25 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு நிலத்தாழிறக்கம், மண்சரிவு, வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மலையிலிருந்து கற்களும் புரண்டு கொண்டிருக்கின்றன. சீரற்ற காலநிலையுடன் தொடர்ச்சியாக மழை பெய்வதன் காரணமாகவே இவ்வாறு ஹேவாஹெட்டை தோட்டம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இடம்பெயர்ந்த மேற்படி 65 பேரும் ஹேவா ஹெட்டை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பாரிய சத்தத்துடன் பாறை ஒன்று உருண்டு வந்ததைத் தொடர்ந்து இன்றைய தினமும் பாராங்கற்கள் புரளத் தொடங்கின. இதேநேரம் மண்சரிவும், நிலவெடிப்பும், நிலத்தாழிறக்கமும் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்ததன.
நிலைமையுணர்ந்து உடனடியாக செயற்பட்ட தோட் ட முகாமையாளர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். கிராம உத்தியோகத்தர் வி. நந்தகுமார் மற்றும் அங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பரதிப் சுமனசேகர உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர அவசிய உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM