(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருளினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதுச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒருவருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார தீர்ப்பளித்தார்.
புள்ளே டிலானி பெப்ரேரா எனும் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பெண், தான் செய்த குற்றச்சாட்டை ஒப்புக் கொன்ட நிலையிலேயே நீதவான் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்ப்பளித்தார்.
கடந்த மார்ச் 8 ஆம் திகதி, நீதிமன்றுக்கு வந்த பெண்ணை வாயிலில் வைத்து நீதிமன்ற காவலரான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் யமுனா சோதனைச் செய்த போது அவரிடம் இருந்து 200 மில்லி கிராம் கஞ்சா, 50 மில்லி கிராம் ஹெரோயின் ஆகியன மீட்கப்பட்டன.
விளக்கமறியலில் உள்ள ஒருவருக்கு கொடுப்பதற்காகவே அந்த போதைப் பொருள் எடுத்து வரப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்தது.
இந் நிலையில் குறித்த 33 வயதான பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலான வழக்கு இன்று மீள விசாரணைக்கு வந்தது.
இதன் போது தன் மீதான குற்றச்சடடுக்களை குறித்த பெண் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்தே நீதிவான் இரு குற்றச்சடடுக்ளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், முதல் குற்றச்சாட்டு தொடர்பில் மேலதிகமாக மூன்று மாத சிரையும் 2 ஆம் குற்றச்சாட்டுக்கு 6 மாத சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என நீதிவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM