(க.கமலநாதன்)
தமிழ் ஊடகங்கள் எனது செய்திகளை திரிபு படுத்தி வெளியிடுகின்றது எனவே அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தமிழ் ஊடங்களுக்கு அறிவிப்பதாக தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு கதிரேசன் வீதி புனர்நிர்மாண பணிகளை பார்வையிட வந்திருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் ஊடகங்கள் எனது செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுவதை காணமுடிகின்றது. அதனால் செய்தி ஆரசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இது குறித்து அவதானம் செலுத்த கோருகி்ன்றேன்.
எனது கருத்துகளை திரிபு படுத்தாமல் முழுமையாக எனது கருத்துக்களை வெளியிடுங்கள் ஏனெனில் நான் தமிழ் மொழியில் ஒரு விடயத்தினை கூறிவிட்டு சிங்கள மொழியில் வேறு விடயத்தினை கூறுவதி்ல்லை இரு மொழியிலும் ஒரே விடயத்தினையே கூறுகின்றேன் எனவே எனது கருத்துக்களை திரிபு படுத்தி வெளியிடுவதைத் தவிருங்கள்.
அதனை புரிந்துகொண்டுஇ தமிழ் மொழியில் எனது செய்திகளை கொண்டு செல்பவர்கள் இது குறித்து கவனமெடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM