பாலத்தடிச்சேனை காணி 31 வருடங்களின் பின் தமிழ் மக்களின் மக்களிடம் கையளிப்பு

Published By: Priyatharshan

08 Jan, 2016 | 02:22 PM
image

( எஸ். சஞ்சீவன் )

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த தமிழ் மக்களின் காணி 31 வருடங்களின் பின் இன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் பாலத்தடிச்சேனை மக்களின் காணி நேற்றுவரை  இலங்கை இராணுவத்தினரின் 5 ஆவது ஆட்லெறி தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இக்காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் பல வருட காலமாக பல தரப்பினரிடமும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர் . இதன் பலனாக தற்போது நல்லாட்சி நிலவுகின்ற இச்சூழலில் தமது சொந்தக் காணி கிடைத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறிவரும் நிலையில் இராணுவ தளவாடங்களை எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினர் காணியினை ஓரளவு புனரமைத்துத் தருவதற்கு காணி உரிமையாளர்களிடம் 2 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதுடன் பொமக்களையும் தமது காணிகளை துப்புரவு செய்வதற்கு அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46