வவுனியாவிலுள்ள மயானத்தில் இரு தரப்பினரிடையே இன்று (21) காலை ஏற்பட்ட முரண்பாடு அருட்தந்தையின் தலையீட்டையடுத்து முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் இன்று காலை இறந்த ஒருவரைப் புதைப்பதற்கு குழி தோண்டப்பட்ட போது ஒரு மதத்தைச் சேர்ந்த சிலர் அவ்விடத்திற்குச் சென்று அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
குழி தோண்டியவர்கள் யாரிடம்? ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தோலிக்க அருட்தந்தை அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் அவருடன் சென்ற சிலர் தோண்டிய குழியை மூடிவிட்டு வேறு இடத்தில் தோண்டுமாறும் தற்போது நீங்கள் தோண்டும் குழி பாதை ஓரமாக இருப்பது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு நின்ற இளைஞர்கள் குழி தோண்டி முடிக்கப்பட்டுவிட்டது முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணம் தருகின்றோம் மூடுமாறு தெரிவித்துள்ளதையடுத்து முரண்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அருட்தந்தை இரு பகுதியையும் சமாதானப்படுத்தியதுடன் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதையடுத்து குழி தோண்டிய இடத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM