வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இன்று பிற்பகல் கைக்குண்டின் சிதறல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு பாடசாலையிலிருந்து இன்று (20.03.2017) காலை 9.00 மணியளவில் பாடசாலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பாக சிறிய மதில் அமைப்பதற்காக கிடங்கு வெட்டியபோது அதற்குள் வெடிகுண்டின் வெடித்த பகுதி துண்டுகள் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து பாடசாலை நிர்வாகத்தினால் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இன்று (20.03.2017) பிற்பகல் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று மாலை பாடசாலைக்கு சென்ற விஷேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் மேலும் கிடங்குகளை அகலமாக தோண்டியபோதும் அதற்குள் வெடித்த வெற்றுத்துண்டுகள் மீட்கப்பட்டதுடன் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டின் சிதறல் துண்டுகளை விஷேட அதிரடிப்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ் பாடசாலை வளாகத்தினுள் கடந்த யுத்தகாலத்தில் இரானுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM