வவுனியா பொதிமண்டப (குட்சைட் ரோட்) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19) இரவு உடைக்கப்பட்டு, காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு செய்த பின்னர் இரவு மணியளவில் குறித்த களஞ்சியசாலையினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர் பணியாளர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் களஞ்சியசாலையில் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை.
இன்று காலை 7.30 மணியளவில் களஞ்சியசாலையினை திறப்பதற்கு சென்ற ஊழியர் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து களஞ்சியசாலை உரிமையாளரூடாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேயிலை, பால் பைக்கற் போன்றவற்றை வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்து வரும் களஞ்சியசாலையே கொள்கையிடப்பட்டுள்ளது. நேற்று இரவே உடைக்கப்பட்டுள்ளதாகவும், களஞ்சியசாலையிலிருந்து 43ஆயிரம் முதல் 45ஆயிரம் ரூபா வரையான பணம், காசோலை இருந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM