பாராளுமன்ற விசேட அமர்வு நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளதோடு அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையும் சபையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசதரப்பு பிரதம கொறடாவும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக மேலும் தெரிவிக்கையில்,
2016ஆம் ஆண்டின் முதலா வது விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமை சபாநாயகர் கரு
ஜயசூரிய தலைமையில் காலையில் கூடுகின்றது.
இதன்போது பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கான பிரேரணை காலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற புரட்சிக்கு இம்மாதம் 9ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM