12 நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை  : திருத்­தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­படும்

Published By: Priyatharshan

18 Mar, 2017 | 10:14 AM
image

இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை  12 நாடுகள் தமது இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருக்­கின்­றன. 

அந்­த­வ­கையில் இன்னும் சில தினங்களில் பிரே­ரணை  நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை யில் அதி­க­மான நாடுகள்  இந்த வரைவுக்கு  இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.   

ஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஒரு­சில உறுப்பு நாடு­களும் உறுப்­பு­ரி­மை­யற்ற சில நாடு­களும்  இலங்கை  தொடர்­பான பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை  வழங்­கி­யி­ருக்­கின்­றன. 

அந்­த­வ­கையில் அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஜேர்­மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்­னே­குரோ, நோர்வே, மெஸ­டோ­னியா, பிரிட்டன், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள்  பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன.  மேலும் இந்த பிரே­ர­ணை­யுடன் சம்­பந்­தப்­பட்ட நாடான இலங்­கையும்  பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்க முன்­வந்­துள்­ளது. 

அந்­த­வ­கையில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது  இம்­மு­றையும் வாக்­கெ­டுப்­பின்றி  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் சாத்­தியம்  உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.   இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை,  2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை  முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பதை  வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

அது­மட்­டு­மன்றி  நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை  இலங்­கையில் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன்   எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு வரை  2015 ஆம் ஆண்டு பிரே­ணையை அமுல்­ப­டுத்த  கால அவ­கா­சமும்  வழங்­கி­யுள்­ளது. 

இதே­வேளை  நேற்று முன்­தினம் ஜெனிவா விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட   வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சர்­வ­தேச நீதி­ப­திகள் இன்றி    உள்­ளகப் பொறி­மு­றையின் மூலம்  விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும்  குறிப்­பிட்­டி­ருந்தார்.  

அந்­த­வ­கையில்  இலங்கை பிரே­ர­ணைக்கு   மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள்   ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென  அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. 

இலங்கையின்  நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள்  இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02