ரஜினியுடன் இரண்டாவது முறையாக பொலிவுட் பிரபல நடிகை ஒருவர் ஜோடி சேரவுள்ளார்.
ரஜினியின் நடிப்பில் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பொலிவுட் நடிகைகள் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.
அந்த வரிசையில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பொலிவுட் ஹீரோயினை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது, மற்றொரு பொலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தீபிகா படுகோனே ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடிப்பில் உருவாகவிருக்கும் அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருக்கிறார். தனுஷ் தனது வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM