சோமாலிய கடற்கொள்ளையர்கள் - கடற்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எட்டு இலங்கையருடன் பயணித்த எண்ணெய்த் தாங்கிக் கப்பலைக் கடத்திச் சென்ற சோமாலிய கடற்கொள்ளையர்கள், கப்பலை ஆலுலா பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். அதில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மாலுமிகள் எண்மரும் வேறொரு இடத்தில் மறித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடற்கொள்ளையர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்காக வந்த கப்பல் ஒன்றைக் கைப்பற்ற முயற்சித்தபோதே இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
எனினும், கடற்கொள்ளையர்களின் படகு தப்பிச் சென்றுவிட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் தரப்பில், தமது தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சோமாலிய அரசு தரப்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மாலுமியர்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM