கம்பஹா மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. மினுவாங்கொடை, மீரிகம, திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய பகுதிகளில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருவதாக, வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் இறுதிப் பகுதியில், கம்பஹா மாவட்டத்தில் தீவிரமடைந்திருந்த டெங்கு நோய் சற்றுத் தணிந்து, மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், இது தொடர்பிலான பரீட்சார்த்த நடவடிக்கைகள், மாவட்ட சுகாதாரப் பணிமனையினரால், தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் தாக்கத்தினால் , மினுவாங்கொடை - கல்லொழுவை பிரதேசத்திலிருந்து மாத்திரம் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இருவர் வீதம் நான்கு பேர், நேற்று கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடங்களை விடவும் இம்முறை டெங்கு தாக்கத்தினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு, கம்பஹா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM