இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் 25 பேரை அவுஸ்திரேலிய குடியகழ்வு திணைக்களம் நாடுகடத்தியுள்ளது.
இலக்காயிலிருந்து கடந்த வருடம் விமானம் மூலம் மலேசியா சென்று, இவ் வருடம் ஜனவரி மாதமளவில் அவுஸ்திரேலியா சென்றிருந்த 25 பேர், விஷேட விமானம் மூலம் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்ற, அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM