முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை சீனாவிற்கு விஜ யம் செய்யவுள்ளார். சீனாவின் அழைப்பின் பேரில் செல்லும் அவர் 16 ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சீன விஜயத்தை அவரது இணைப்பாளர் உறுதிப்படுத்தியதுடன் இந்த விஜயமானது மதம் சார்ந்த விஜயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இந்த விஜயத்தின் போது; சீன அரசின் முக்கியஸ்தர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் சீனாவுடனான புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இந் நிலையில் உள்நாட்டில் சீன அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டு பிரதிநிதிகள் கவனத்தில் கொண்டிருந்தனர்.
அதே போன்று தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன அரசின் உயர்மட்டக் குழு துறைமுகநகர் அபிவிருத்தி திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவை தொடர்பில் அவதானம் செலுத்தி கலந்துரையாடி வரு கின்றது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு செல்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM