(எம்.சி.நஜிமுதீன்)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 18 நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு அல்லது வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 5.8 பில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம்சாட்டினார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிரஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைாயாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதன் பிரகாரம் ஹில்டன் ஹோட்டல் 250 மில்லியன் அமெரிக்க டொலர், ஹைட்டி 100 மில்லியன் அமெரிக்க டொலர், வோட்டஸ் ஏஜ் 100 மில்லியன் அமெரிக்க டொலர், கிரேண்ட் ஒரியன்டல் ஹோட்டல் 75 மில்லியன் அமெரிக்க டொலர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஓய்வு விடுதி 40 மில்லியன் அமெரிக்க டொலர், லிற்ரோ கேஸ், லங்கா ஹொஸ்பிடல் உட்பட 18 நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு கணிப்பீடு செய்துள்ளனர் என குற்றச்சாட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM