(எம்.எப்.எம்.பஸீர்)
பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு களுத்துறையைச் சேர்ந்த கீதா சியாமலீ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்களான உபுல், பிரதீப் ஆகியோர் போக்கு வரத்து கடமையில் இருந்துள்ளனர். இதன் போது டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிருத்தியுள்ளனர். அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் தற்போது கைதகியுள்ள பெண்ணே செலுத்தியுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதன் போது காரினை இயக்கிய குறித்த பெண் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த கான்ச்டபிள் விழவே தொடர்ந்து அக்காரை அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதன் போது அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்துள்ள கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் மன்சான் எனும் நபர், பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதோ ஆபத்து என கருதி காரின் குறுக்காக வேனை நிறுத்தி பொலிஸ் கான்ஸ்டபிள் உபுலை காப்பாற்றியுள்ளார்.
இதன் போது காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்கலில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ஒருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM