நெதர்லாந்துடனான இராஜதந்திர உறவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிர்ச்சியளித்திருக்கிறது துருக்கி. இதை வெளிப்படுத்தும் வகையில், துருக்கிக்கான நெதர்லாந்துத் தூதுவருக்கு நாட்டினுள் நுழைய அனுமதி மறுத்திருக்கிறது துருக்கி. இந்த அறிவித்தலை துருக்கி பிரதமர் நுமான் குர்த்துல்மஸ் வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் கடந்த வாரம் அரசியல் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் துருக்கி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலந்துகொள்ள விரும்பினார். இருந்தபோதும் அவருக்கு அனுமதியளிக்க நெதர்லாந்து அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இதனால் பெரிதும் அதிருப்தியடைந்த அந்த அமைச்சர், இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு நெதர்லாந்தைக் கேட்டிருந்தார். எனினும் அதற்கு நெதர்லாந்து மௌனம் காத்து வந்தது.
இதனால் வெகுண்ட துருக்கி, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அந்நாட்டுத் தூதுவருக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதனிடையே, துருக்கி அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, குறித்த அரசியல் ஊர்வலத்தில் மோதல்களும் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM