வண்ணாத்திவில்லு எரிக்குலன்வில்லு பிரதேசத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் உடைந்து வீழ்ந்ததில் எட்டு வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வண்ணாத்திவில்லு பண்டாரநாயக்கா வித்தியாலயத்தில் 3 ஆம் வகுப்பில் பயின்ற சுதீபா தர்ஷனி எனும் சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
சிறுமி தனது அயல் வீட்டைச் சேர்ந்த இரு நண்பிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு கொங்கிரீட் தூண்களில் சாரி ஒன்றினால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் உடைந்து வீழ்ந்துள்ளது.
அதன் கீழ் அகப்பட்டே இச்சிறுமி உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது. இச்சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணை நேற்று திங்கட்கிழமை புத்தளம் வைத்தியசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM