மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரி விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய சபை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
சயிட்டம் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்க சட்ட ரீதியிலான அதிகாரம் உள்ளதாக கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
அதன்படி சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறுவோரை இலங்கை மருத்துவ சபையின் தொழில்சார் வைத்தியர்களாக பதிவு செய்யவேண்டும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் நீதிபதி எஸ். துரைராஜா உள்ளடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழுவே இந்த தீர்ப்பை அறிவித்தனர்.
சைட்டம் நிறுவனத்தில் பட்டம் பெற்ற தம்மை மருத்துவத் துறையில் பதிவு செய்ய இலங்கை மருத்துவ சபை மறுப்பதாக குற்றம் சாட்டி, அந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறிய மல்ஷானி சுரவீர ஆரச்சி மற்றும் திலும் சூரியாராச்சி ஆகியோர் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பின் போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வைத்திய சபை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM