கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் சென்.தோமஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 138ஆவது நீலங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி அணி தனது முதல் இன்னிங்ஸில் 255 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் சந்தீப (42), ஹிமேஷ் (41) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சென்.தோமஸ் கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களை குவித்து 102 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றது.
இதில் ரவிந்து 98 ஓட்டங்களையும், ரொமேஷ் 92 ஓட்டங்களையும் விளாசினர். அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்.தோமஸ் அணி வெற்றிபெறக் கூடிய போட்டி மழை காரணமாக சமநிலையில் நிறைவடைந்தது. எனவே மீண்டும் ஒரு முறை டி.எஸ். சேனாநாயக்க கிண்ணமானது றோயல் கல்லூரியிடமே கையளிக்கப்பட்டது.
போட்டியின் ஆட்டநாயகனாக ரொமேஷும், சிறந்த பந்துவீச்சாளராக கன பெரேராஇ சிறந்த துடுப்பாட்ட வீரராக ரவிந்துஇ சிறந்த களத்தடுப்பாளராக மந்தில விஜேரத்ன ஆகியோர் தெரிவாகினர். இவர்கள் அனைவரும் சென்.தோமஸ் கல்லூரி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM