(க.கமலநாதன்)
இந்திய மீனவர்கள் மீதாக துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்த திமழக இளைஞனர் பிரிட்ஜோவின் இறுதி கிரியைகள் இன்று அல்லது நாளை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக இந்திய இலங்கை மீனவர் நலன்புறிச் சங்கத்தின் தலைவர் எஸ்.பீ.அந்தோனிமுத்து தெரிவித்தார்.
அதநேரம் இந்த விவகாரம் குறித்து பேசுவத்றகாக இந்திய சார்பில் ஐவர் இலங்கை வரவுள்ளதுடன் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட் உயர்மட்ட பிரதிநிதிகளுடனான பலருடன் சந்திப்புக்களையும் நடத்வுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி விடயங்களை தனக்கு இந்திய இலங்கை மீனவ நலன்புரி சங்கத்தின் தலைவர் தவதாஸ் தொலைபேசி வாயிலாக அறியத்தந்தார் என குறிப்பிட்ட அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இலங்கை கடல் எல்லையில் சுட்டுக்ககொள்ளப்பட்ட 23 வயதான பிரிட்ஜோ என்ற இளைஞனின் இறுதி கிரியைகள் நாளை அல்லது நாளை மறுதினம் செய்யப்படலாம் என இந்திய இலங்கை மீனவ நலன்புரி சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ் தெரிவித்தார்.
இறுதி கிரியைகளின் பின்பு 5 பேர் கொண்ட விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இவர் இலங்கை கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய உயர்மட்ட பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரிவின் பேரில் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விடயம் குறித்து ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்ததை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை நீண்ட நாட்கள் வைத்திருப்பதில் பயனில்லை அதனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
அதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் இறுதி கிரியைகள் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதென இந்திய இலங்கை மீனவர் நலன்புறி சங்கத்தின் தலைவர்கள் எஸ்.பீ.அந்தோனிமுத்து கேசரிக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று யட்டியந்தோட்டை தேவாலயத்தில் மீனவர் நலன்புறி சங்கத்தின் ஆலோசகர் அந்தோனிமுத்து தலைமையில் மேற்படி இளைஞரின் ஆத்ம சாந்திக்காக பிரார்தித்து விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM