வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்ற பின் முதன்முறையாக மஹ்மூதுடன் நேற்று (10) தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.
இதுபற்றித் தெரிவித்த அப்பாஸின் பேச்சாளர் நாபில் அபு தைனா, கூடிய விரைவில் அப்பாஸ் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவேண்டும் என ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாகவும், இதன்மூலம், இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த முடிவதுடன், இஸ்ரேலுடனான பிரச்சினையைத் தீர்த்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை, ட்ரம்ப்பின் பேச்சாளர் சீன் ஸ்பைஸரும் உறுதிசெய்துள்ளார். பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்க, இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றும், இதற்கான முழு ஒத்துழைப்பையும் அமெரிக்கா வழங்கத் தயாராக உள்ளது என்றும் தொலைபேசி மூலம் ட்ரம்ப் தெரிவித்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM