வவுனியாவில் கடந்த 16 தினங்களாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவாக புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப்பேரணி இன்று (11) காலை 11 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக, மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக, பசார் வீதி. இலுப்பையடி, நீதிமன்ற வீதியூடாக காணாமற்போன உறவினர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட உனக்கு ஆண்டுகள் தேவையா? போன்ற வாசகங்ளைத் தாங்கியவாறு கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM