ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராகப் போரிட மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள்!

Published By: Devika

09 Mar, 2017 | 09:31 AM
image

சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடும் யுத்தத்தை ஆரம்பித்திருக்கும் அமெரிக்க ஆதரவு கூட்டுப் படைக்கு மேலும் ஆயிரம் இராணுவ வீரர்களை அனுப்ப ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள் குவைத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவர்களைக் களமிறக்கவுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

யுத்த களத்தில் ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னரங்கு படையணைத் தலைவர்கள் இந்த வீரர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும், அங்கு ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதற்கட்ட நடவடிக்கைகளுள், ஐ.எஸ். இயக்கத்தைப் பூண்டோடு அழித்துவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59