லிந்துலை மெராயா பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 இற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதிப்படைந்த வீடுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடும் அடங்குவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சூறாவளியினால் ஓல்ட்ரிம் தோட்டத்துக்கு சொந்தமான கௌலினா பிரிவும் மற்றும் என்போல்ட் தோட்டப்பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.
இதில் கௌலினா தோட்டத்தில் 25 வீடுகளும், என்போல்ட் பகுதியில் 8 வீடுகளும் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் சேதமடைந்துள்ளன.
மின் கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 இற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க பிரதேச செயலகம், தோட்டநிர்வாகம், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM