மருந்து வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், தூங்கிக்கொண்டிருந்த கணவனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
கமல் (28), குஷி (26) தம்பதியர் டெல்லியின் நரேலா பகுதியைச் சேர்ந்தவர்கள். குஷி, கடந்த சில ஆண்டுகளாக மன நலக் குறைபாட்டுக்காக சிகிச்சை எடுத்து வருபவர். மூன்று குழந்தைகளின் பெற்றோரான இவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது வழக்கமாகிவிட்டிருந்தது.
கமல், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது மருந்து ஒன்றை வாங்குவது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. சற்று நேரத்திலேயே அது சண்டையாக வெடித்தது. குஷி மீது கோபம் கொண்ட கமல் அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கினார். இதனால் கடும் கோபத்துக்கு உள்ளானார் குஷி.
இரவு உணவின் பின் குடும்பமே நித்திரைக்குச் சென்றது. இரண்டு பிள்ளைகள் தமது அறைக்குள் சென்று தூங்க, நான்கு வயது நிரம்பிய கடைசிப் பெண் குழந்தை தம்பதியரின் அறையில் விழித்திருந்தது.
கணவன் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட குஷி, ஒரு சுத்தியலை எடுத்து வந்து குழந்தையின் கண் முன்பாகவே கமலின் தலையில் ஓங்கியடித்தார். துடித்துத் துள்ளித் திரும்பிய கமலின் முதுகெலும்பிலும் சுத்தியலால் கண் மண் தெரியாமல் தாக்கினார். இறுதியில் இரத்த வெள்ளத்தில் கமல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதன் பின் வீட்டுக்கு வெளியே வந்த குஷி, வீதியில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தையும் கண்டு இரசித்தார்.
சம்பவம் பற்றித் தெரியவந்த அயலவர்கள் பொலிஸுக்குத் தகவல் அளித்தனர். அதன்படி வந்த பொலிஸார் குஷியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கோபத்தினாலேயே தான் தாக்கியதாகவும், அவரைக் கொலை செய்ய நினைக்கவில்லை என்றும் குஷி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM