இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, இரண்டு படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலையிலிருந்து கடந்த 3 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களே நாகபட்டின கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒரு மீனவர் இறந்ததாக கூறப்படும் நிலையில், இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM