(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)
பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளக் கையளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக நாளை புதன்கிழமை எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.
அப்பிரேரணையானது தனியாருக்கு சொந்தமான பாரியளவிலான காணிகள் மே 2009ல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னரும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இக்காணிகளில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
யுத்தத்திற்கு முன்னர் பொதுமக்கள் வாழ்ந்த, தற்போது பாதுகாப்பு படையினர் வசமுள்ள இக்காணிகளை அவைகளின் உரிமையாளர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி மீளகையளிக்கும் படிக்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM