அன்பின் உச்சம்! : வவுனியாவில் நிகழ்ந்த சோகச் சம்பவம்

Published By: MD.Lucias

06 Mar, 2017 | 05:26 PM
image

கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது,  கணவருக்கு சுகயீனம்  என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த  பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம்  என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே இடத்தில் விழுந்து உயிரை விட்டுள்ளார்.

இதனையடுத்து கணவரை  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதும் அவருடைய உயிரும் பிரிந்துள்ளது.

 இருவருக்கும் இடையிலான அளவுக் கடந்த அன்பின் வெளிப்பாடே இந்த மரணத்திற்கு காரணம் என குறித்த தம்பதிகளை புகழும் பிரதேச மக்கள், இந்நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08