(ஆர்.யசி )
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றிருக்க வேண்டும். ஏனெனில் இன்று பாவனையில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களும் புலிகளின் ஆயுதங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொட்டவா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஆரம்பத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி காணப்பட்டது. அப்போது ஆயுதங்களுடன் அவர்கள் போராடி மக்களை வீதிகளில் கொன்று போட்டனர்.
பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் காணப்பட்டது. இவற்றை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை இவ்வாறு ஆயுதக் குழுக்களுக்கு விற்றிருக்க வேண்டும். ஏனெனில் இன்று பாவனையில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களும் புலிகளின் ஆயுதங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இவை கண்டறியப்பட வேண்டும். அதேபோல் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவந்ததை போலவே இந்த பாதாள கோஷ்டிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இன்று நாட்டில் மோசடிக்கார குழுக்களும் ஆயுதக் குழுக்களும் அதிகளவில் உருவாக்கம் பெற்றுள்ளன. நாட்டில் சகல பகுதிகளிலும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களை பாதாள கோஷ்டிகளுக்கு பணத்திற்கு விற்றுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது.
நாட்டில் அமைதியை உருவாக்கவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனினும் ஒருசிலர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றமை நன்றாக வெளிப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM