நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தினை வெற்றிகொண்ட அபிமானம் இலங்கை இராணுவத்தின் வசமுள்ளது. எனவே இராணுவ வீரர்கள் ஒரு போதும் தமது அங்கவீனத்தை வெளிப்படுத்தி மக்களின் அனுதாபங்களைப் பெற விரும்புவதில்லை.
எனவே விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் என்ற பேரில் சிறிய குழுவொன்று சம்பள உயர்வின் நிமித்தம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவது இராணுவத்தின் மீதான நிந்தனையே ஆகும் என இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமக்கான ஓய்வூதிய தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை என விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் குழுவொன்று ஆர்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இவர்களின் போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ள இராணுவம் தயாராக இல்லை.
மேற்படி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினருக்கு 60 தொடக்கம் 80 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்கள் ஒய்வு பெற்றவர்கள் என்ற போதும் யுத்தத்தினால் தமது அங்கங்களை தியாகம் செய்தவர் என்ற வகையில் அவர்களின் மொத்த சம்பளத் தொகையும், அதனுடன் கூடிய வரப்பிரசாத தொகையும் ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்கள் போலவே விசேட தேவையுடைய வீரர்கள் பலர் தற்போதும் இராணுவத்தினுள் இருக்கின்றார். அவர்கள் தாம் அங்கவீனமானவர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. காரணம் அவர்கள் இராணுவ வீரர்கள் என்ற அபிமானத்தினையும் தாம் யுத்த்த்தினை வெற்றிகொள்ள அர்பணிப்புடன் செயற்பட்ட வீரர்கள் என்ற அபிமானத்தையும் தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
அதனால் இராணுவ வீரர்கள் அனுதாபத்தின் வழி தமது கோரிக்கைகளை பொற்றுக்கொள்ள எத்தனிப்பதை ஒருபோதும் நாம் அனுமதியோம். யுத்தத்தால் அங்கங்களை இழந்தாலும் சரி, உயிரை இழந்தாலும் சரி யுத்த வெற்றியை வசப்படுத்திக்கொண்டோம் என்ற கெளரவத்தினை மட்டுமே சன்மானமாக கொள்பவர்களையே நாங்கள் இராணுவ வீரர்கள் என்று வரையறுப்போம்.
அத்துடன் தற்போது ஆரப்பாட்டங்களை முன்னெடுப்பவர்கள் 12 வருடங்கள் ஆகும் முன்பே சேவையிலிருந்து அங்கவீனத்தினை காரணம் காண்பித்து விலகிச் சென்றவர்கள். அதனால் தற்போது சேவையில் உள்ளவர்களின் சம்பளத்தினை பார்க்கிலும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் சம்பளத் தொகை அதிகமாகும். அதனையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
மேற்படி செயற்பாடுகளின் காரணமாக விசேட தேவையுடைய இராணுவ தரப்பு முழுவதையும் அவமானப்படுத்திக்கொண்டுள்ளனர். இது நாட்டின் சட்டத்திற்கும் இராணுவச் சட்டத்திற்கும் முரணானதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM