இராணுவத்தினர் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு தண்டனை வழங்கவே சர்வதேசம் எமக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. எனவே குற்றமிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தை வெற்றிக்கொண்ட இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு உள்ளது. இதனால் இராணுவத்தினருக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட இடமளிக்கமாட்டோம்.
இராணுவத்தினரை மின்சார கதிரை, சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்து நாங்களே காப்பாற்றியுள்ளோம்.
இதேவேளை யுத்தம் என்ற போர்வையில் ஒரு சில இராணுவத்தினர் குற்றமிழைத்திருப்பின் அவர்களை தண்டிப்பதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.
1971, 1989 ஆம் ஆண்டுகளில் குற்றமிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டனர்.
அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ இராணுவத்தில் எவரேனும் குற்றமிழைத்திருந்தால் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM