கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் கத்திக் குத்துக்கு இலக்காகி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சாந்தபுரம் கிராமத்தில் இருந்து இரணைமடு குளத்திற்கு நன்னீர் மீன் தொழில் நடவடிக்கைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இரணைமடு இராணுவ தலைமையகத்திற்கு பின்புறமாக காட்டுக்குள் மறைந்திருந்த ஒருவர் திடீரென குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது பெண் குறித்த நபரை தடுத்து நிறுத்தியதால் கத்தியால் கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த பெண்ணுக்கு முன்னால் ஐம்பது மீற்றர் தூரம் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மகன், “தாயின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது தான் குளத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது பற்றைக்குள் பார்த்த நாவல் கலர் மேலாடை அணிந்திருந்த நபரே அம்மாவை கத்தியால் குத்திவிட்டு முகாம் பக்கம் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். அவர் இராணுவ சிப்பாய் என்றே தாம் பலமாக நம்புகிறேன்” என தெரிவித்தார். அவரை எப்போது காட்டினால் அடையாளம் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி கிளிநொச்சி படைகளின் தலைமையகம் அமைந்துள்ள இரணைமடு முகாமின் பின்புறம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலா விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM